PRABU HI TECH NEWS

Latest Post

'கட்சியில் உதவி செய்ய வைத்திருந்தவர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் உச்சபட்ச அதிகாரத்தை செலுத்துவதா?' என சீறித்தான் சசிகலாவுடன் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் 13 பேரை, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் வெளியேற்றினார் ஜெயலலிதா. கட்சியை விட்டு நீக்கியதுடன், சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்தார். இன்று வரையில் சசிகலாவைத்தவிர மற்றவர்கள் யாரும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இன்றோடு 5 ஆண்டுகள் கடந்து விட்டது. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இன்று போயஸ் தோட்டம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. அன்று ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை என்ன என்பதைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.
ம.நடராஜன் (சசிகலாவின் கணவர்)
ஜெயலலிதா அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையை, எண்ணத்தை அவரிடம் விதைத்ததே இவர்தான் என சொல்லப்படுவதுண்டு. ஆரம்ப காலத்தில் சசிகலாவுடன் கார்டனில் ஆளுமையோடு வலம் வந்தவர் நடராஜன். பின்னர் கார்டனை விட்டு வெளியேறினாலும், தனக்கென ஒரு லாபியை உருவாக்கி இயங்க ஆரம்பித்தார். இது ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போக, அவரை விலக்கி வைக்க ஆரம்பித்தார். ஆட்சி அதிகாரத்தில் எல்லை மீறுவதை அறிந்த ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் உள்ளிட்டோரை வெளியேற்றினார். சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்ட போதும், நடராஜன் மீது கோபத்துடனே இருந்தார். ஆள் கடத்தல், நில அபகரிப்பு வழக்குகள் நடராஜன் மீது பாய்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் அதிகாரம் செலுத்தத் துவங்கியிருக்கிறார். போயஸ் கார்டனில் இப்போது இல்லை என்றாலும், சசிகலாவுக்கு ஆலோசனை சொல்வது நடராஜன்தானாம். நடராஜனின் மூவ்தான் சசிகலாவின் மூவ் என்கிறார்கள்.
மன்னார்குடி திவாகரன் (சசிகலாவின் தம்பி)
மன்னார்குடி சந்தரகோட்டையில் வசிக்கிறார் திவாகரன். டெல்டா பகுதியில் 'பாஸ்' என்றுதான் இவரை அழைக்கிறார்கள். மன்னார்குடியில் கிளைமேட் சோடா கம்பெனி நடத்தி வந்தவர், இப்போது கல்லூரியை நடத்தி வருகிறார். ஆள் கடத்தல், கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் இவர் மீது ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சர்வ அதிகாரத்துடன் வலம் வருகிறார். தனது சம்பந்தியான ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனை உளவுப்பிரிவு அதிகாரியாக நியமித்திருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் இவருக்குதான் முதல் மரியாதை.  அரசியலில் மீண்டும் வலம் வரத்துவங்கி விட்டார்.
வி.என். சுதாகரன்
சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன்தான் சுதாகரன். சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவிக்கும் அளவுக்கு சுதாகரன் மேல் ஜெயலலிதாவுக்கு பிரியம் இருந்தது. வளர்ப்பு மகன் திருமணமும், சசிகலாவுடனான நட்புமே 1996 தேர்தலில் தோல்விக்கு காரணமாக அமைய... சசிகலாவோடு சுதாகரனும் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சுதாகரனை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக வந்தபோதுகூட சுதாகரனை ஜெயலலிதா திரும்பிக்கூட பார்த்ததில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு சுதாகரன் வந்திருந்தார். இவருக்கு மிக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், அதிகாரத்தை செலுத்துவார் என்றே சொல்லப்படுகிறது.
டி.டி.வி. தினகரன்
வனிதாமணியின் மூத்த மகன் டி.டி.வி. தினகரன். ஒருகாலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணிகளை இவர்தான் கவனித்து வந்தார். 1999ல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர், அதன் பின்னர் தேனிக்கே குடியேறிவிட்டார். அப்போது அறிமுகமான ஓ.பன்னீர்செல்வம், தினகரனிடம் காட்டி பவ்யத்தால்தான், 2001ல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். கட்சியில் ஓரங்கப்பட்டதால் யார் கண்ணிலும் படாமல் புதுச்சேரியில் குடியேறிய தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இப்போது மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறாது.
வி.பாஸ்கரன்
வனிதாமணியின் இரண்டாவது மகன். ஆரம்பத்தில் இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருந்தார். ஆங்கில சேனல்களுக்கு இணையாக தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தினார். ஆரம்பத்திலிருந்தே கல்குவாரி பிசினஸ் செய்து வந்தவர். சினிமாவில் ஆர்வம் காட்டினார்.  சினிமாவெல்லாம் வேண்டாம் என சசிகலா எச்சரிக்கை விடுக்க... அதையும் புறந்தள்ளி, 'தலைவன்' என்ற படத்தில் நடித்தார். மீடியாக்களில் இவர் கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்த... இவர் மீது வழக்குகள் பாய்ந்தன. சிறையில் தள்ளப்பட்டார். தற்போது கல்குவாரி பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார் பாஸ்கரன். மீண்டும் கார்டன் பக்கம் தலை காட்டக்கூடும் என்கிறார்கள்.
டாக்டர் வெங்கடேஷ்
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை, கட்சியின் போஸ்டர்கள், புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை கவனித்து வந்தார். ஜெயலலிதா, இவர் திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாநிலச் செயலாளராக ஆக்கப்பட்டார். தனக்கு எதிராக சதி செய்தார் என சொல்லப்பட்டு கட்டம் கட்டப்பட்டவர்களில் வெங்கடேஷும் ஒருவர். இவர் மீது பல வழக்குகளை பதிவு செய்த ஜெயலலிதா, சிறையில் தள்ளினார். அதன் பிறகு தனக்கு சொந்தமான ஸ்கேன் சென்டரை கவனிப்பது, கோல்ப் விளையாடுவது என 'தான் உண்டு தன் வேலை உண்டு' என இருந்தவர்,  ஜெ மறைவிற்கு பிறகு மீண்டும் ஆக்டிவ்வாக செயல்படத்துவங்கி இருக்கிறார். சசிகலா மீதான அதிருப்தியாளர்களை சரிசெய்ய இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
இராவணன்
சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். மிடாஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர், மெல்ல மெல்ல கார்டனுக்குள் நுழைந்து, மேற்கு மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்டம் போட்டார். ஜெயலலிதாவுக்கும் மேலே சென்று ஆட்டம் போட்டவர் என சொல்லப்பட்ட ராவணன், பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தலை காட்டத்துவங்கி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு தன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் கொடுத்தவர், மீண்டும் மேற்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கிறார்.
ராமச்சந்திரன்
நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனுக்கு தொண்டர்கள் தரும் மனுவை பரிசீலிக்கும் பொறுப்புதான் முன்னர் வழங்கப்பட்டது. கட்சியை விட்டு நீக்கியபிறகு அண்ணன் நடராஜன்தான் எல்லாம். நடராஜன் ஆலோசனைப்படிதான் இயங்குவார். அவர் எதிரில் உட்கார கூட மாட்டார். அந்தளவு மரியாதை. இப்போது சென்னை போயஸ் கார்டனில் இருந்து வரும் உத்தரவுகளை அண்ணன் நடராஜனுக்கு கொண்டு சேர்ப்பது இவர்தான். விரைவில் கட்சியிலும் அதிகாரம் செலுத்துவார் என்கிறார்கள்.
மகாதேவன்
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரத்தோடு வலம் வந்தவர். ஜெ பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்தார். கட்சியை விட்டு விரட்டப்பட்ட பின்னர், வழக்குகள் பாய்ந்தன. எல்லாவற்றையும் சமாளித்து மருத்துவமனை, பேருந்து போக்குவரத்து தொழிலை நடத்தி வந்தவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகாரம் செலுத்த துவங்கினார். ஜெயலலிதா மறைந்த அன்று, ஜெயலலிதாவின் உடலுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தார். சசிகலா பொதுச்செயலாளராக ஆக வேண்டுமென தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், மகாதேவன் படமும் இடம்பெறும் அளவுக்கு, அதிகாரத்துடம் வலம் வரத்துவங்கி விட்டார்.
கலியபெருமாள்
சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்திதான் கலியபெருமாள். திருச்சி. கே.கே. நகரில் வசிக்கும் இவரின் கட்டுப்பாட்டில்தான் மத்திய மண்டல அ.தி.மு.க. இயங்கியது. தனக்கு வேண்டிய உளவுத்துறை அதிகாரி மூலம் கட்சி ஆட்களை உளவு பார்ப்பது இவரது முக்கிய வேலை. இப்போது அமைதியாகவே இருக்கிறார். மீண்டும் மத்திய மண்டல பொறுப்பாளராக வலம் வருவார் என்கிறார்கள்.
பழனிவேலு
நடராஜனின் சகோதரர் பழனிவேலு. நீக்கப்பட்டவர்களில் இவருடைய பெயர் 4வது இடத்தை பிடித்தது. இவர் போலீஸ்துறையில் பணியாற்றியதால், இவரை ஜெயலலிதா தனது பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக்கொண்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கார்டனுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்தவர். தற்போது அண்ணன் நடராஜன் கிழித்த கோட்டை தாண்டுவதில்லை. விரைவில் நடராஜனின் ஆதரவோடு, அதிகாரத்துடன் வலம் வருவார் என சொல்லப்படுகிறது.
தங்கமணி
மகாதேவனின் தம்பி தங்கமணி. கட்சி விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார் என்றாலும், தன்னிடம் வரும் சிபாரிசுகளை செய்து கொடுக்க மட்டும் அதிகாரத்தை பயன்படுத்துவார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். சசிகலா ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது, இவர் சீனுக்கு வரலாம் என்கிறார்கள்.

ஹெட்போன்கள் பயன்படுத்தும் போது ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும்.

ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது பிறர் ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்கு எளிதில் காது சார்ந்த தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மிகவும் அடைப்பான ஹெட்செட்கள் உங்களுக்கு மிகவும் அருமையான இசை அனுபவத்தை தரும் அதே நேரம் உங்கள் காதுகளுக்குள் காற்றை அனுப்ப மறுக்கிறது.
அது காதிரைச்சல், காது தொற்று மற்றும் காது கேளாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.

பெரும்பாலான நேரம் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் நபர்களுக்கு காதுகள் மிக விரைவில் உணர்ச்சி இல்லாத நிலையை அடையும் என்றும், அதிலிருந்து மீண்டு வர நேரம் பிடிக்கும் என்றும் கூறுகிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.

உட்புற காது மூளையோடு நேரடியாக இணைப்பில் உள்ளதால் ஹெட்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்படைய வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஹெட்போன்களால் ஏற்படும் விபத்துகள். இந்த விளைவு பற்றிய விளக்கமே தேவையில்லை பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்பட பிரதான காரணமாய் இருப்பது ஹெட்போன்கள் தான்.

மிகச்சிறிய ஹெட்போன்களை, அதாவது நேரடியாக காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் அளவில் உள்ள ஹெட்போன்களை தவிரிக்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும்படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.

முடிந்தவரை உங்கள் ஹெட்செட்களின் ஸ்பாஞ் கவர்/ ரப்பர் கவர்களை மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது. உங்கள் ஹெட்போன்களில் ஸ்பொஞ் கவர் அல்லது ரப்பர் கவர் இல்லையெனில் ஹெட்செட்தனை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கத்தை கையாளுங்கள்.

நடக்கும் போது, பிற வாகன பயணத்தின் போதும் ஹெட்செட்களை தவிர்த்திடுங்கள், இல்லையெனில் குறைந்த அளவிலான ஒலியை கையாளுங்கள். இல்லாவிடில் உங்கள் காது கே (ட்) காது ..

பேடிஎம் மொபைல் வேலட்டிற்கு நிகராக இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் பணப்பைகளில் ஒன்றாக ப்ரீசார்ஜ் உருவாகியுள்ளது. நவம்பர் 8-ஆம் தேதி முதல் இந்தியாவில் ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுக்கள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பணமில்லா பண பரிமாற்ற முறையை இந்திய மக்கள் பெரும்பாலோனோர்கள் பயன்படுத்தி வருகின்றன. அதில் ஒரு ஆன்லைன் ரீசார்ஜ் ஆப் தான் - ப்ரீசார்ஜ்.!
நீங்கள் ப்ரீசார்ஜ் பயன்படுத்த விரும்பினால் மற்றும் ப்ரீசார்ஜ் ஆப்பில் பண பரிமாற்றம் பற்றிய போதுமான தெளிவு உங்களிடம் இல்லை என்றால் அதாவது ப்ரீசார்ஜ் ஆப் பயன்படுத்தி எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.? ப்ரீசார்ஜ் டெஸ்க்டாப் வலைத்தளம் வழியாக ப்ரீசார்ஜ் வேலட்டில் இருந்து வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.?

என்பதை பற்றிய 'டிப்ஸ்' தொகுப்பே இது. பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு ப்ரீசார்ஜ் ஆப் பற்றிய நல்லதொரு தெளிவை வழங்கும்.
ப்ரீசார்ஜ் ஆப் பயன்படுத்தி வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.?
1) ப்ரீசார்ஜ் பயன்பாட்டை திறந்து உங்கள் அக்கவுண்டில் நுழையவும்
2) மை அக்கவுண்ட் டீடெயில்ஸ் பொத்தானை தட்டவும்
3) உங்கள் பணப்பையில் உள்ள பேலன்ஸ்-ஐ டாப் செய்யவும் (உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் ஐடி கீழேயுள்ள)
4) இப்பொது வித்ட்ரா பட்டனை டாப் செய்து, நீங்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய விரும்பும் வங்கி கணக்கு தேர்வை நிகழ்த்தவும் திரும்பப்பெறு தட்டவும்
5) வித்ட்ரா ஆப்ஷனை டாப் செய்யவும்.
ப்ரீசார்ஜ் டெஸ்க்டாப் வலைத்தளம் வழியாக ப்ரீசார்ஜ் வேலட்டில் இருந்து வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.?
1) ப்ரீசார்ஜ் வலைத்தளத்தினுள் நுழைந்து உங்கள் ப்ரீசார்ஜ் அக்கவுண்ட்டில் உள்நுழையவும்
2) ஆட் மணி பொத்தானை கிளிக் செய்யவும்
3) அடுத்த விண்டோவில் வித்ட்ரா டூ பேங்க் விருப்பத்தை (இடது புறத்தின் கீழே இருந்து இரண்டாவது விருப்பம்) தேர்வு செய்யவும்
4) நீங்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய விரும்பும் வங்கியை தேர்வு செய்யவும்
5) வித்ட்ரா பட்டனை கிளிக் செய்யவும்.

புதுடெல்லி:

உளவுத்துறை அறிக்கைகளை தொடர்ந்து இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் மால்வேர் நிறைந்த செயலிகளை முக்கிய பிளே ஸ்டோர்களில் வெளியிட்டிருப்பதாகவும், இவற்றை பயனர்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் பட்சத்தில் ஹேக்கர்களால் பயனர்களின் வங்கி சார்ந்த அதிமுக்கிய தகவல்களை திருட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் Top Gun, Mpjunkie, Bdjunkie மற்றும் Talking Frog உள்ளிட்ட செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் துவக்கம் முதலே சைபர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து இருக்கின்றன. இத்துடன் இந்திய ராணுவ நடவடிக்கைகளை கன்காணிக்க இது போன்ற செயலிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் கூகுள் SmeshApp எனும் செயலியை உடனடியாக தடை செய்திருக்கிறது. இத்துடன் இந்திய ராணுவ வீரர்களையும் இது போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் டிஜிட்டல் வாலட் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சார்ந்த பயன்பாடுகள் அதிகரித்து இருக்கும் போது வெளியிடப்பட்டிருக்கும் இது போன்ற அறிவிப்பு மக்களிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் பொது மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது கூடுதல் கவனமாக இருப்பது அவசியமாகி இருக்கிறது. 

முதல்வர் ஜெயலலிதா எப்போதும் கையில் ஒரு கருவியை வைத்திருப்பார். அவர் விரும்பிக்கேட்கும் பாடல்களை அந்தக்கருவியில் வைத்திருப்பதாக மற்றவர்களிடம் கூறுவதுண்டு. ஆனால், அந்தக் கருவியில்தான் சில முக்கியமான ரகசியங்களை வைத்திருந்தாரோ? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
உடல்நலமில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுமுன், தன்னுடன் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர்களுக்குத் தெரியாமலே சில ரகசிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா. அந்த வகையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் பற்றிய விவரங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அ.தி.மு.கழக அசையா சொத்துக்களை அவரது மறைவுக்குப் பின் யார் நிர்வகிக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களையெல்லாம் அதில் பதிந்து வைத்திருக்கிறாராம்.
சில முக்கியமான டாக்குமெண்ட்டுகள் தனக்கு விசுவாசமான எவரிடம் இருக்கிறது என்பது போன்ற தகவல்களும் அதில் அடக்கமாம். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் அந்தப் பிரமுகர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான சிலருக்குக் கூட தகவல்கள் தெரியாதாம். சினிமா பாடல்களை ஒரு பகுதியில் கொண்ட அந்தக் கருவியின் பாஸ்வேர்ட் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இது போன்ற தகவல்கள் இருக்கிறது என்கிறார்கள்.
அந்தக் கருவியை மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு பணிப்பெண்ணிடம் கொடுத்து வைத்திருந்தாராம் ஜெயலலிதா. அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு நினைவு திரும்பிய சமயத்தில் அவர் விசாரித்தது அந்தக் கருவியைத்தான். அதைத் தேடும்போதுதான், அதை வைத்திருந்த பணிப்பெண்ணைக் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர் எங்கே போனார் என்று தெரியாமல் குழம்பி தமிழகத்தின் சில ஊர்களிலும், குமரி மாவட்டத்தை ஒட்டிய கேரள எல்லைகளில் சில பகுதிகளிலும் சர்வே எனச் சொல்லி தேடுதல் நடத்தியிருக்கிறார்களாம் சென்னையைச் சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகள். ‘அட... என்னங்க இது... ஏதோ இங்கிலீஷ் படக் கதை மாதிரி இருக்கே... நம்பலாமா?’ என்ற சந்தேகத்துடன் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.
“இதெல்லாம் வடிகட்டின பொய். அந்த மாதிரி எந்த தகவலோ, உயிலோ இல்லை. பணிப்பெண் காணாமப் போயிட்டாங்கனு சொல்றதுலாம் கற்பனையின் உச்சம். சசிகலாவின் எதிர் கோஷ்டியினர் இப்படிலாம் ஏதாவது வதந்தி கிளப்பிவிடத்தான் செய்வார்கள். அதையெல்லாம் ‘அம்மா’ வழியில் சசிகலா எப்படியும் முறியடிப்பார்!” என்கிறார்கள்.
இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, உண்மையா என்னனு யார் சொல்றது!?

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget