பொண்ணுங்க எப்போல்லாம் அழகா இருப்பாங்க தெரியுமா?


பசங்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பொண்ணுங்கள கொஞ்சம்கூட வெட்கப்படாம பார்க்குறவங்க. இன்னொண்ணு பொண்ணுங்களுக்கே தெரியாம திருட்டுத்தனமா வேடிக்கை பார்க்குறவங்க. ஏன்னா பொண்ணுங்கள ரசிக்காத பசங்களே கிடையாது. அப்படி  ரசிக்கும்போது பெண்கள் பேரழகா தெரியும் தருணங்கள் எவையெல்லாம் தெரியுமா?
* தமிழ்நாட்டுல மழைக்காலத்துலயும் வெயில் அடிக்கும்கிறது உலகம் அறிஞ்ச விஷயம். கொளுத்துற வெயில்ல கூட்டம் அதிகமான பஸ்ல ஏறிட்டு கர்சீஃப் எடுத்து வியர்வையைத் துடைச்சிட்டு, அதே கர்சீஃப்பை விசிறியாக்கி விசிறும்போதுகூட பொண்ணுங்க அவ்வளவு அழகு பாஸ்! அடிக்கிற சம்மர்ல இதெல்லாமா ரசிப்பீங்கங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது.
* தெருவுல நடந்து போற வழியில் இருக்கிற எல்லாக் கோயில் வாசலைக் கடக்கிறப்பவும், கண்ணை மூடி ரெண்டு விரலை மட்டும் எடுத்து நெத்தியில் வெச்சுட்டு அப்புறமா அதே விரல்களை கிஸ் பண்றதைப் பார்த்ததுக்கு அப்புறமா 'கடவுள் இருக்கான் கொமாரு'-ன்னு மாறுன பசங்களோட எண்ணிக்கை அதிகம்.

* கீழே குனிஞ்சு தெருவையே வெறிக்க வெறிக்கப் பார்த்துட்டு வர்ற பொண்ணுங்க, நாம கிராஸ் ஆகிறப்போ மட்டும் சொல்லி வெச்ச மாதிரி சைடு லுக் விட்டுக்கிட்டே தலைகோதி, பசங்களுக்கு ஆயிரம் டன் மின்சாரத்தை பாய்ச்சுவாங்க பாருங்க! அந்த டைம்ல பசங்க மனசுல சேதாரமே இல்லாம ஒரு விபத்தே நடக்கும்.
* ஏதாவது சண்டை வந்தா கோபமும், கண்ணு கலங்கி ரெண்டு மில்லி லிட்டர் அழுகையும் சேர்த்துப் பேசுவாங்க. வேற வழியில்லாம நம்மப் பசங்க ஸாரி கேட்டு சரண்டர் ஆவாங்க. அந்நேரம் வலியே வராத அளவுக்கு சின்னதா ஒரு அடி அடிக்கிறப்போ பொண்ணுங்க பேரழகு பாஸ்.
* தப்பித்தவறி கோயில் பக்கம் போனா... நெய் விளக்குப் போடுற இடத்துல வலம் வர்ற பொண்ணுங்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவுல தெரியுற ஹீரோயின் மாதிரி எக்ஸ்ட்ரா அழகோட தெரியுறதைக் கவனிச்சதுண்டா? அதே மாதிரி மோதிர விரல்ல பட்டும் படாம குங்குமத்தை எடுத்து வெச்சுக்கிற அழகை நாள் முழுக்கப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்னு பசங்களுக்குத் தோணும்.

* எங்கேயோ பார்க்கிற மாதிரி பசங்க பக்கம் திரும்பும்போது கண்ணும் களவுமா மாட்டிக்கிட்டா டக்குனு வேற பக்கம் திரும்பறதுக்கும், மிரட்சி கலந்து சின்னதாப் பொண்ணுங்க சிரிக்கிறதுக்கும் ஆயிரம் லைக்ஸ் தாராளமாப் போடலாம். ஆண்கள என்ன கொடுமைப்படுத்தினாலும் இந்தக் காரணங்களால மன்னிச்சு விட்றலாம்.
* ஏதாவது கேள்வி கேட்டாலோ இல்லை கலாய்ச்சாலோ... ஒரேயொரு புருவத்தைச் சுருக்கி முறைக்கிற பார்வையாலே 'போடா டேய்' அப்படிங்கிறதைக் கண்ணாலேயே பேச பொண்ணுங்களால மட்டும் எப்படித்தான் முடியுதோ? இதையே பசங்க பண்ணா... மைண்ட் வாய்ஸ்ல யோசிக்கிற வடிவேலுவா தெரிவாங்கங்கிறது வேற விஷயம்.
* வேலைக்கு நடுவுல மானிட்டரை வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இல்லாத நகத்தைக் கடிக்கிறதுலேருந்து... சூடே இல்லாத காபியை ஊதி ஊதிக் குடிக்கிறதுவரை பொண்ணுங்க பண்ற எல்லாமே மொத்தத்துல அழகுதான் ஜி!
Labels:

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget